Friday, January 24, 2014

தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முன் விளக்கு ஏற்றி வழிபட்டு வருபவர்க்கு எந்த வித தோஷமும் நீங்கி கஷ்டமின்றி வாழலாம்.

ஒவ்வொருவரும் அவரவர்கள் குலதெய்வத்தை தவறாமல் வழிபட்டு வரவேண்டும்.
மேலும் அவரது இஷ்ட தேவதையை வணங்கி வரவேண்டும்.
அவரது மூதாதையர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கடன்களை தவறாமல் செய்ய வேண்டும்.
அவரவர் தாய், தந்தையை பேணி காக்க வேண்டும்.

மேற்கண்ட நன்கு விசயத்தையும் எவர் முறையாக செய்து வருகிறார்களோ அவர்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் வாழலாம்.

இறைவனை அடைய ஏக தெய்வ வழிபாடு மிகவும் அவசியம்.
அதன்படி பாம்பன் சுவாமிகள் முருகனை மட்டுமே வணங்கி முருகனது அருளாசி பெற்றார்.
அவர் அருளிய குமாரச்தவம் படித்தால் அணைத்து கஷ்டங்குளும் நீங்கி விடும் என்பது உறுதி. மேலும் சண்முக கவசம் படிப்பதால் எல்லா வளங்களும் பெற்று வாழலாம். மேலும் பகை கடிதல் படிப்பதால் எதிரிகள் இல்லாமல் வாழலாம்.

இங்கே குமாரச்தவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அனவைரும் படித்து பயன் பெறவும்.


நான் இறைவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தன்மையை இங்கு விளக்கி கூறுகிறேன். அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் தங்கள் அதை நிவர்த்தி செய்ய எனக்கு சுட்டிகாட்டவும்.
இறைவனை அடைய மந்திரம், தந்திரம் , யந்திரம் என மூன்று முறைகளை பின்பற்றலாம்.
மந்திர உச்சாடனம் மூலம் இறைவனது நாமங்களை சொல்லி இறைவனை அழைக்கலாம்.
தந்திரம் மூலம் இறைவனை நமக்குள் எலசெய்து என்றும் நாம் அவருக்கு அடிமையை இருந்ததும அவரது புகழை எல்லோருக்கும் தெரியசெய்தும் தர்ம காரியங்கள் செய்தும் இறைவனை அடைவது.
யந்திரம் என்பது இறைவனுக்குரிய மூல மந்திரங்களை அவருக்கு உரிய உலோகத்தில் வரைந்து அவருக்கு உரிய மந்திரங்களை முறையாக உச்சாடனம் செய்து பூஜை செய்து வருவதால் இறைவனிடம் வரங்கள் பெறுவது.

மேலும் இறைவனை அடைய சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் நிர்ணயித வேதங்களை படித்து அதன்படி நடந்து இறைவனை அடைவது என பல வழிகளை நம் முன்னோர்கள் வகுத்து தந்துள்ளார்கள்.
அதன்படி இறைவனை தரிசனம் பண்ணும்போது எந்த முறையில் தரிசனம் பண்ண வேண்டும் என்பது பற்றியும் அவரிடம் நாம் எந்த முறையில் வரங்களை பெற முடியும் என்பது பற்றியும் எனக்கு தெரிந்தவைகைளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஸ்ரீ கணேஷாய நமஹ:
அனைவரும ஆனந்த வாழ்க்கை வாழ அய்யன் விநாயகன் அருள் பெற்று எனது முதல் முயற்சியை துவங்குகிறேன்
உலகம் என்பது எல்லோருக்கும் உடையது என்றாலும் அதை இறைவன் எதற்காக படைத்தான் என்று வினவும் போது முதலில் எனக்குள் ஒலித்த ஒளி அந்த இறைவன் எங்கு இருக்கிறான் என்பதை தேடும் முயற்சி நமக்குள் எடுத்தால் தானே அவரிடம் உலகை எதற்காக படைத்தான் என்பதையும் அதை எவ்விதம் அனுபவித்து லயிப்பது என்ற கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள முடியும் என்பது.



ஆகவே அனவைரும் இறைவனை தேடும் முயற்சியில்